மாவட்ட செய்திகள்

தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 9-ந்தேதி வெளியீடு

தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 9-ந்தேதி வெளியீடு.

தினத்தந்தி

சென்னை,

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக நிதி மேலாண்மை மிகவும் மோசமாக இருந்ததாக தி.மு.க. குற்றம் சாட்டி வந்தது. தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், நிதி நெருக்கடி நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அடுத்து நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்களை மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இருந்த வருவாய் பற்றாக்குறை விவரம், கடன் சுமை மற்றும் அரசு செலுத்திய வட்டி தொடர்பான விவரங்கள், தனி நபர் வருமானத்தின் நிலை போன்றவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதை வருகிற 9-ந் தேதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை