மாவட்ட செய்திகள்

போதை பொருள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

திருவள்ளூரில் உள்ள காமராஜர் சிலை அருகே நேற்று காஞ்சீபுரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவின் துணை போலீஸ் சூப்பிரண்டு டில்லிபாபு தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் போலீசார் அந்த வழியாக வந்த கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் கஞ்சா, போதை பவுடர், போதை மாத்திரைகள் போன்றவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விளக்கமாக எடுத்து கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க 24 மணி நேரமும் 93447 89429 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தினர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்