மாவட்ட செய்திகள்

அரசு அனுமதியின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கைது

தானேயில் அரசு அனுமதியின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தானே,

தானே மாவட்டம் வாங்கனி பகுதியில் டாக்டர் உமா சங்கர் குப்தா என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அவர், ஓமியோபதி மருந்துகள் மூலம் தன்னால் கொரோனாவை குணப்படுத்த முடியும் என கூறியிருந்தார்.

இது குறித்து உள்ளூர் சுகாதாரத்துறையினர் டாக்டர் மீது குல்காவ் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், டாக்டர் உமாசங்கர் குப்தா மற்றும் அவரது கிளினிக்கில் வேலை பார்க்கும் பெண் டாக்டரும் மாநில அரசு, மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் டாக்டர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் டாக்டர் உமாசங்கர் குப்தாவை கைது செய்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்