மாவட்ட செய்திகள்

கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்

ஆண்டிப்பட்டி அருகே கரடி தாக்கி தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

தினத்தந்தி

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் தர்மர் (வயது 40). இவர், மலைப்பகுதிக்கு சென்று தேன் சேகரித்தல், கிழங்கு எடுத்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று மதியம் 12 மணியளவில் ஏத்தக்கோவில் அருகே மலைப்பகுதியில் தேன் சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென்று பாய்ந்து தர்மரை சரமாரியாக தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அந்த கரடியிடம் இருந்து தப்பி வந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு