இடிந்து விழுந்த வீட்டை படத்தில் காணலாம். 
மாவட்ட செய்திகள்

கோவையில் நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி சாவு

கோவையில் நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதில் படுகாயம் அடைந்த அவருடைய தாயாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வீடு இடிந்து விழுந்தது

கோவை சித்தாபுதூர் ஹரிபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆக வில்லை. இவர் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜசேகர், சரஸ்வதி ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

அப்போது நள்ளிரவில் அவரது வீட்டின் மண் சுவர் திடீரென்று இடிந்தது. மேலும் மேற்கூரையுடன் இடிந்து விழுந்தது.

இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜசேகர், சரஸ்வதி ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது குறித்த தகவலின் பேரில் போலீஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தொழிலாளி சாவு

அவர்கள், இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜசேகர் பரிதாபமாக இறந்தார்.

தலையில் பலத்த காயங்களுடன் சரஸ்வதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு