மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தேவதானப்பட்டியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 29). இவர் கடந்த மாதம் வழிப்பறி, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு, பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் தங்கப்பாண்டி மீது கஞ்சா விற்றது, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே, கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார்.

அவரது உத்தரவின்பேரில் தங்கப்பாண்டியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து