நெல்லை:
பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர் தனது உறவுக்கார 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.