செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் வங்காள தேசத்தவருக்கு குடியுரிமை

கடந்த 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் வங்காள தேசத்தவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டுவரை 5 நாடுகளை சேர்ந்த 19 ஆயிரம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 15 ஆயிரத்து 36 பேர் ஆவர்.

பாகிஸ்தானை சேர்ந்த 2 ஆயிரத்து 935 பேருக்கும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 914 பேருக்கும், இலங்கையை சேர்ந்த 113 பேருக்கும், மியான்மரை சேர்ந்த ஒருவருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்