செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக சர்ச்சை கருத்து: சிவசேனா எம்.பி.க்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த சிவசேனா எம்.பி.க்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் ரோக் தோக் என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலையங்கம் வெளியானது. இதில், கன்னையா குமார் ஒரு விஷம். அவரை கட்டாயமாக நாடாளுமன்றத்துக்குள் விடக்கூடாது. எனவே பா.ஜனதா வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்தாவது அவரை தோற்கடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

சாம்னாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதி மீறப்பட்டு உள்ளதாக சாம்னா ஆசிரியர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு