மும்பை,
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள கொடிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட்டுள்ளது. இந்திய அளவில் மராட்டியம் தான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இங்கு கொரோனா புதிய வேகமெடுத்து பரவி வருகிறது.
இந்த நிலையில் இன்று மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 390 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,07,098 ஆக அதிகரித்து உள்ளது.
இதே போல மாநிலத்தில் ஒரே நாளில் 120 பேர் நோய் தொற்றுக்கு பலியானார்கள். மாநிலத்தில் இதுவரை ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 950 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 50,978 பேர் குணமடைந்துள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மும்பையில் மட்டும் இதுவரை 58,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.