செய்திகள்

டெல்லியில் இன்று மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கணிசமாகவே உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,645 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 58 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 3,545 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97,693 ஆக உள்ளது. தற்போது வரை 17,407 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு