செய்திகள்

“ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள்” - ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள் என ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடு இருந்ததாகவும், டிரம்பை வெற்றி பெற செய்ய ரஷிய அதிகாரிகள் உதவியதாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

இந்த புகார் தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு சுமார் 2 ஆண்டு காலம் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததது. அதில், 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, டிரம்போ அவரது பிரசார குழுவை சேர்ந்தவர்களோ ரஷியாவுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட கூடாது என ரஷியாவுக்கு ஜனாதிபதி டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், செர்ஜி லாவ்ரோவுடன், உக்ரைன் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்திய ஜனாதிபதி டிரம்ப், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கு ரஷியா எந்தவொரு முயற்சிகளையும் செய்யக்கூடாது என கடுமையாக எச்சரித்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் டிரம்ப் உடனான சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த செர்ஜி லாவ்ரோவ், தாங்கள் இருவரும் தேர்தல் குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை என கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்