செய்திகள்

ஈவ் டீசிங் சம்பவம்: இளம்பெண்ணின் பேஸ்புக் பதிவால் இளைஞர் கைது

சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை ஈவ் டீசிங் செய்த இளைஞர் பேஸ்புக் பதிவால் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மங்களூரு,

கர்நாடகாவில் மங்களூரு நகரில் ஜெப்பு என்ற பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் (வயது 29). இவர், சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த ரேஷ்மி என்ற இளம்பெண்ணை தனது ஸ்கூட்டரில் பின் தொடர்ந்து சென்று ஈவ் டீசிங் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து கடந்த ஜூன் 25ந்தேதி ரேஷ்மி புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்கூட்டரின் நம்பர் பிளேட் தெளிவாக இருந்துள்ளது.

இந்த புகைப்படம் சமூக ஊடகத்தில் பரவி பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் தாமாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் ரிஸ்வான் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்