செய்திகள்

சிரியாவில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடிவிபத்து - 31 வீரர்கள் உயிரிழப்பு

சிரியாவில் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 வீரர்கள் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

பெய்ரூட்,

சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷாய்ரத் நகரில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரசு படை வான்வழி தாக்குதல் நடத்துவதில் ஷாய்ரத் விமானப்படை தளம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இங்கு உள்ள கிடங்கு ஒன்றில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆயுதக்கிடங்கில் இருக்கும் காலாவதியான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு பயங்கர வெடி விபத்து நேரிட்டது. கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதில் ராணுவ அதிகாரிகள் உள்பட 31 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பல வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். சக வீரர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த, 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிரிய ராணுவம் ரசாயன தாக்குதலில் ஈடுபடுவதாக கூறி ஷாய்ரத் விமானப்படை தளம் மீது அமெரிக்க படை அதிரடி வான்தாக்குதல் நடத்தியதில் 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டது நினைவு கூரத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு