செய்திகள்

சேலம் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்களை போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு

சேலம் தளவாய்ப்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்களை போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

சென்னை

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது. முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவானது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு. 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் விவரம் வருமாறு:-

* தஞ்சை பூதலூர் ஒன்றியம் 2-வது வார்டு, மதுரை செல்லம்பட்டி ஒன்றியம் முதல் வார்டு, சிவகங்கை கண்ணங்குடி ஒன்றியம் முதல் வார்டில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி

* கன்னியாகுமரி : கிள்ளியூர் ஒன்றியம் 1வது வார்டில் பாஜக வேட்பாளர் மோகன்தாஸ் வெற்றி

* மதுரை : திருமங்கலம் ஒன்றியம் 5-வது வார்டில் பாஜக வேட்பாளர் முருகன் வெற்றி

* சேலம் தளவாய்ப்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்கள் வெளியேற்றம் . அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் எண்ணிக்கையில் முகவர்கள் வந்ததாக புகார் எழுந்தது. திமுக முகவர்களை போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

* ஆரணியில் ஒன்றிய 1-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் கவிதா காமராஜ் வெற்றி.

* திண்டுக்கல் : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் 1-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் வெற்றி.

* பட்டுக்கோட்டை ஒன்றியம் 2-வது வார்டில் திமுக வேட்பாளர் மாரியாயி பன்னீர்செல்வம் வெற்றி

* திண்டுக்கல் : கொடைக்கானல் ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் பூங்கொடி வெற்றி.

* அரியலூர் : செந்துறை ஒன்றியத்தில் பாமக வேட்பாளர் கீதா வெற்றி

* சேலம் : தலைவாசல் ஊராட்சி ஒன்றிய 2-வது வார்டில் பாமக வேட்பாளர் வெற்றி

* தஞ்சை ஒன்றிய 2-வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மலர்மதி வெற்றி

* ராமநாதபுரம் : நயினார்கோவில் ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் இளவரசி வெற்றி.

* தூத்துக்குடி : சாத்தான்குளம் ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

* நாமக்கல் : பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 1 மற்றும் 2-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு