செய்திகள்

பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமனம்

பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக, இந்திய பெண் கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இத்தகவலை பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்துள்ளார். கீதா கோபிநாத், இந்தியாவில் பிறந்த பெண் ஆவார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்தவர். இவர் ரகுராம் ராஜனுக்கு பிறகு, இந்த பதவியில் நியமிக்கப்படும் 2வது இந்தியர் ஆவார்.

கீதா கோபிநாத், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். தற்போது, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். ஒரு பொருளாதார பத்திரிகையின் இணை ஆசிரியராக உள்ளார். 40 ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்