செய்திகள்

கலபுரகியில் முன்னாள் மந்திரியின் உறவினர் வெட்டிக் கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கலபுரகியில் முன்னாள் மந்திரியின் உறவினரை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

கலபுரகி,

கலபுரகி மாவட்டம் ஷாகாபாத் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (வயது 43). இவர் முன்னாள் மந்திரி குருநாத்தின் உறவினர் ஆவார். இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தொழிற்சாலைக்கு வேலைக்காக சதீஷ் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சித்தாபூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள், காரை கொண்டு சதீசின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதினர். இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்

உடனே காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் அரிவாள், பட்டாகத்தியால் சதீசை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஷாகாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையான சதீசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர் சதீசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்தது யார்?. என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீசை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்