செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில்: 51 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 51 ரவுடிகளிடம் ஓராண்டுக்கு எழுத்துப்பூர்வமாக நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பெரிய காஞ்சீபுரம், சின்ன காஞ்சீபுரம், காஞ்சீபுரம் தாலுகா, பாலுச்செட்டிசத்திரம், ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம், சோமங்கலம் போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 51 ரவுடிகள் கைது செய்யப்பட்டு காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ முன்பு ஆஜர்படுத்தப்பட்டு குற்ற ச்செயல்களில் இருந்து திருந்தி ஒழுக்கமாக வாழ எச்சரித்து அவர்களிடம் இருந்து ஓராண்டுக்கு எழுத்துப்பூர்வமாக நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது.

மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் புதிதாக குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்களின் நடவடிக்கையை கண்காணித்து கட்டுப்படுத்தும் பொருட்டாக மொத்தம் 86 பேர் மீது புதிதாக போக்கிரி சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்