செய்திகள்

சேலத்தில் வாலிபரிடம் நகை, பணம் பறிப்பு

சேலத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபரிடம் நகை, பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தினத்தந்தி

சேலம்,

சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குமார் (வயது 28). இவர் ரெட்டியூர் பகுதியில் உள்ள அண்ணாதிடல் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மர்ம ஆசாமி ஒருவர் நடந்து வந்தார்.

திடீரென்று குமாரை அந்த மர்ம ஆசாமி வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டார். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரம், கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி என மொத்தம் ரூ.27 ஆயிரம் மதிப்பிலான நகை, பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதை பார்த்த குமார் சத்தம் போட்டார். இதைகேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வந்து மர்ம ஆசாமியை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் அழகாபுரம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கன்னங்குறிச்சியை சேர்ந்த தீனதயாளன் என்று தெரிய வந்தது.

தொடர்ந்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை