செய்திகள்

கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திருவள்ளுரில், கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பீமன் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 56). இவர் கடந்த 2017ம் ஆண்டு குடும்ப தகராறு காரணமாக தனது மாமியார் பார்வதியம்மாள் (80) என்பவரை கொலை செய்தார்.

இது தொடர்பாக புல்லரம்பாக்கம் போலீசார் ராதாகிருஷ்ணனை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவாகி விட்டார். இதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை நேற்று கைது செய்த புல்லரம்பாக்கம் போலீசார், திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்