தேசிய செய்திகள்

ஷ்ரத்தா கொலை வழக்கை 'லவ் ஜிகாத்' கோணத்தில் விசாரிக்க வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தினத்தந்தி

மும்பை,

மும்பை அருகே உள்ள வசாய், மாணிக்பூரை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தாவின் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது காதலன் அப்தாப் அமீன், ஷ்ரத்தாவை கடந்த மே மாதம் கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் உள்ள காட்டில் வீசியதாக போலீசார் கூறுகின்றனர்.

ஷ்ரத்தா, அப்தாப் அமீன் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தநிலையில் அப்தாப் அமீனை கண்டித்து காட்கோபரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராம் கதம் கூறுகையில், " அப்தாப் அமீன், ஷ்ரத்தாவை கொலை விவகாரத்தில், பின்னணியில் 'லவ் ஜிகாத்' உள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என டெல்லி போலீசாருக்கு கடிதம் எழுத உள்ளேன். இந்த சம்பவத்துக்கு பின்னால் கும்பல் அல்லது குழுக்கள் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். தனிநபர் செய்த கொலை போல இது தொயவில்லை. இதற்கும் முன்பும் இதுபோல சம்பவங்கள் நடந்து உள்ளன. " என்றார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்