கோப்புப் படம் 
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் பேருந்து விபத்து: ஒருவர் பலி, பலர் படுகாயம்

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர். முன்னதாக, அரம்பாக்கில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து லிலுவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாம்ரைல் நகருக்கு அருகில் வந்த போது விபத்துக்குள்ளானது.

இதையடுத்து விபத்தில் காயமடைந்த 13 பேர் மீட்கப்பட்டு ஹவுரா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறு காயங்களுடன் உயிர்தப்பிய பேருந்து பயணிகள் முதலுதவிக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தகவலறிந்த போலீசார் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்