சிக்கிம்,
சிக்கிம் மாநில முதல் மந்திரியான பிரேம் சிங் தமாங், நேற்று அம்மாநிலத்தில் நடந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டு பொது கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், அரசு ஊழியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு மகப்பேறு காலத்தில் 1 வருடம் விடுமுறை வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளோம் எனவும், தந்தைகளுக்கு 1 மாத விடுப்பு அளிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் தங்களது குடும்பங்களையும், குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள இது உதவும் என்றும் இச்சட்டம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பிரேம் சிங் தெரிவித்துள்ளார்.