தேசிய செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம்: 10 பேர் கைது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். #IPL2018

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் விஷ்னோ சராய் பகுதியில் ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு வீடு ஒன்றில் சோதனை நடத்திய போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து எல்.ஈ.டி டிவி, 13 செல்போன்கள், மற்றும் ரூ.1.94 லட்ச ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு