தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் போலீசாருக்கு புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் - சட்டசபையில் போலீஸ் மந்திரி தகவல்

கர்நாடகத்தில் போலீசாருக்கு புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் சிவலிங்கேகவுடா கேட்ட கேள்விக்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 100 போலீஸ் நிலையங்கள் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும். சில பகுதிகளில் உள்ள போலீஸ் நிலைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டன. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. அதனால் புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்போது செயல்பாட்டில் உள்ள போலீஸ் குடியிருப்பு கட்டிடங்களை பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்பு-2025 என்ற திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் போலீசாருக்கு புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடுகள் தகுதியான போலீசாருக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை