தேசிய செய்திகள்

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை, ரூ.10 கோடி அபராதம்; புதிய மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தற்போது நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்கள் நடந்து வரு கின்றன. வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கிறது. அந்த அமைப்பினருடன் அரசாங்கம் நேற்று 2-வது முறை யாக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் (சனிக்கிழமை) தொடர்கிறது. இதற்கிடையே வரும் காலங்களில் தேர்வு முறைகேடுகள் நடைபெறாதபடி தடுக்க மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை முன்மொழிந்து உள்ளது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருக்கிறது.

மந்திரிசபை ஒப்புதல்

பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) சட்டம்-2024-ஐ வலுப்படுத்துவதற்காக திருத்தங்களுடன் கூடிய அந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இம்மசோதா, நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தப்பட்ட இந்த மசோதாவில், வினாத்தாள் கசிவு மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் இடம் பெற்றுள்ளன.

வினாத்தாள் கசிவு

இந்த திருத்தங்களின்படி, குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்ட னையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்பட உள்ளது. இது நாட்டிலேயே மிகவும் கடுமையான தேர்வு மோசடி தடுப்புச் சட்டங்களில் ஒன்றாக அமையும். ஒழுங்கமைக்கப்பட்ட வினாத்தாள் கசிவு வலையமைப்புகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்கவும், தேர்வு முறையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் முயன்று வரும் வேளையில், மந்திரிசபை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.