தேசிய செய்திகள்

இங்கிலாந்து அனுப்பிய 1,000 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன

மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து அனுப்பிய 1,000 வெண்டிலேட்டர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலமாக 1,000 வெண்டிலேட்டர்கள் மற்றும் 3 ஆகிசிஜன் ஜெனரேட்டர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஒவ்வொன்றும் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது எனவும், இதன் மூலமாக ஒரே சமயத்தில் 50 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இங்கிலாந்து அரசு சார்பில் கடந்த வாரம் 200 வெண்டிலேட்டர்கள், 495 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை