தேசிய செய்திகள்

10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

கொப்பா அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஜெயப்புரா அருகே குட்டேதோட்டா பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபாகர்(வயது 22) என்பவர் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபோன்று அடிக்கடி பிரபாகர், மாணவி தனியாக இருக்கும்போது வீட்டிற்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் நடந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளார். ஆனால் மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், ஜெயப்புரா போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிரபாகரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்