தேசிய செய்திகள்

மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு: இன்று மேலும் 422 பேர் பலி

மராட்டியத்தில் இன்று மேலும் 422 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே மராட்டியத்தில் தான் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக மேலும் 422 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20,687 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 11,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6,15,477 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 9,356 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,37,870 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,56,608 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை