தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 11½ கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதுமத்திய அரசு தகவல்

உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி, 

உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் இதுவரை வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் போன்றவற்றின் தரவுகளை மத்திய அரசு வெளியிட்டது.

அதன்படி நாடு முழுவதும் 11.49 கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதைப்போல 1.53 லட்சம் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

குடிநீர் இணைப்பு பெற்றுள்ள அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை 9.34 லட்சமாக அதிகரித்து இருக்கும் நிலையில், 9.02 லட்சம் பள்ளிகளும் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக அரசு கூறியுள்ளது. கங்கை நதி தூய்மை திட்டத்தின் கீழ் ரூ.32,912.40 கோடி செலவில் 409 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் 232 திட்டங்கள் பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

தண்ணீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்காக ஜல்ஜீவன், அடல் புஜல் யோஜனா உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை