தேசிய செய்திகள்

பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள் சுட்டு கொலை; காஷ்மீர் ஐ.ஜி.

காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள் 9 என்கவுண்ட்டர்களில் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் பெண் முதல்வர் என 2 பேர் கொடூர கொலை செய்யப்பட்டனர். ஒரு வாரத்தில் பொதுமக்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டது காஷ்மீர் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமடைந்தது. இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஐ.ஜி. விஜயகுமார் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள், 9 என்கவுண்ட்டர்களில் கொல்லப்பட்டு உள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் ஸ்ரீநகரை சேர்ந்த 5 பயங்கரவாதிகளில் 3 பயங்கரவாதிகளை நாங்கள் சுட்டு கொன்றுள்ளோம் என கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்