தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 6 மாதங்களில் 140 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் 6 மாதங்களில் 140 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் 6 மாதங்களில் 140 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜூன் 25-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரையில் மாநிலத்தில் 19 பயங்கரவாத வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதே கால கட்டங்களில் மாநிலத்தில் 426 கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 34 பேர் காயம் அடைந்துள்ளனர். 2016-ம் ஆண்டு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பயங்கரவாதிகள் உடனான சண்டை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 171 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். 2017-ம் ஆண்டு 167 வீரர்களும், 2018-ம் ஆண்டு 163 வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு