தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலம் தானேயில் இந்த ஆண்டில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 15 பேர் பலி

மராட்டிய மாநிலம் தானேயில் இந்த ஆண்டில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

தானே,

மராட்டிய மாநிலம் தானே, பால்கர் மற்றும் ராய்காட்டில் உள்ள பன்வெல் ஆகிய குடிமைப் பகுதிகளை உள்ளடக்கிய தானே பகுதியில் இந்த ஆண்டில் இதுவரை 15 பேர் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 வரை, 2,07,742 பேருக்கு எச்1என்1 இன்ப்ளூயன்ஸ் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 462 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 15 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

அதிகபட்சமாக தானே மாநகராட்சியில் 291 பேருக்கு பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டது. அவர்களில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியில் பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்ட 56 பேர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை