தேசிய செய்திகள்

புனேவில் இருந்து சென்னை வந்த 17.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி

மராட்டியத்தின் புனே நகரில் இருந்து சென்னைக்கு 17.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்து உள்ளன.

தினத்தந்தி

சென்னை,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்து 17.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை அரசு விடுவித்தது. இந்த 145 பார்சல் தடுப்பூசிகளை பயணிகள் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வர முடியாத சூழலில், அவை சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டன.

இந்த விமானம் புனேவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்தது. உடனடியாக இவை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

கோவேக்சின் தடுப்பூசி பற்றாக்குறையால், கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை அரசு கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்