தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 18 மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

நாடு முழுவதும் 18 மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள மாநிலங்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா, குஜராத், காஷ்மீர், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்கள் வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளன.

அசாம், பீகார், கோவா, மேகாலயா, மணிப்பூர், புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை. ஒடிசா பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதைப்போல பிளாஸ்டிக் கழிவு மேம்பாடு பற்றிய செயல் திட்டங்களையும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்து இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்