கோப்பு படம் 
தேசிய செய்திகள்

இந்த ஆண்டில் 1,800 பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் - மத்திய மந்திரி தகவல்

இந்த ஆண்டில் 1,800 பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் செல்வதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி மும்பை ஹஜ் ஹவுசில் நடந்த விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஹஜ் பயணிகள் இந்த ஆண்டு மானியம் இன்றி பயணம் செய்ய உள்ளனர். எனவே அவர்களுக்கு கூடுதல் செலவு வராமல் பார்த்து கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபியாவில் நியாயமான விலையில் தங்கும் இடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் வழங்க பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஹஜ் பயண நடைமுறைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 56 ஆயிரத்து 601 இந்திய முஸ்லிம்கள் ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். 22 ஆயிரத்து 636 பேர் ஹஜ் குருப் ஏற்பாட்டாளர்கள் மூலமாக செல்கின்றனர். 1,800-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண் துணை (மெஹரம்) இன்றி செல்கிறார்கள்.

இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 83 ஆயிரத்து 140 விண்ணப்பங்கள் வந்து இருந்தன. இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி மூலமாக ஆமதாபாத், பெங்களூரு, கொச்சி, டெல்லி, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய 10 இடங்களில் இருந்து பயணிகள் செல்ல உள்ளனர்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவை சேர்ந்தவர்கள் கொச்சியில் இருந்து ஹஜ் பயணம் செல்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்