தேசிய செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் கங்கனாடி ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டு கஞ்சா விற்ற 2 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பண்ட்வாலை சேர்ந்த அப்துல் சாதிக் (வயது 35), பெல்தங்கடியை சேர்ந்த நவாஸ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா, ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்