தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் கேரள வாலிபர்கள் 2 பேர் சாவு

மோட்டார் சைக்கிள் விபத்தில் கேரள வாலிபர்கள் 2 பேர் பரிதாபமமாக இறந்தனர்.

தினத்தந்தி

சிக்கமகளூரு-

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் அதுல் (வயது 24), ரிஷிகேஷ் (25). இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும், மோட்டார் சைக்கிளில் கோவாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவுக்கு சென்றனர்.

பின்னர் அங்கு சுற்றுலாவை முடித்து கொண்டு 2 பேரும் திரும்பி மோட்டார் சைக்கிளில் பெங்களூருவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அதுல் ஓட்டினார். அப்போது, 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தாவணகெரே பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அதுலின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், அவர்கள் 2 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாவணகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாவணகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து