தேசிய செய்திகள்

மசாஜ் சென்டரில் பயங்கர தீ விபத்து - பெண் உட்பட இருவர் பலி..!

நொய்டாவில் உள்ள மசாஜ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உட்பட இருவர் பலியாகினர்.

தினத்தந்தி

நொய்டா,

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மசாஜ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவில் செக்டார் 53 என்ற பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இருந்த மசாஜ் சென்டரில் நேற்று மாலை 6 மணியளவில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக திடீரென தீப்பற்றியது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில் இருந்த மசாஜ் சென்டரை மீண்டும் திறப்பதற்காக சுத்தம் செய்யும் பணியில் இருவர் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குறுகிய நேரத்திற்குள் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ராதா சவுகன் என்ற பெண்ணும் (வயது 26) அங்குஷ் ஆனந்த் என்ற ஆணும் (வயது 35) இந்த தீ விபத்தில் பலியாகினர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்