தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட், ஒடிசாவில் இருந்து மேலும் 2 ஆக்சிஜன் ரெயில்கள் பெங்களூரு வருகை

ஜார்க்கண்ட், ஒடிசாவில் இருந்து 241.91 டன் திரவ ஆக்சிஜனுடன் மேலும் 2 ரெயில்கள் பெங்களூரு வந்தன.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மத்திய அரசு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் ஆக்சிஜனை அனுப்பி வருகிறது. நேற்று முன்தினம் வரை 14 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து இருந்தன.

இந்த நிலையில் ஜார்க்கண்டில் இருந்து 120 டன் திரவ ஆக்சிஜன், ஒடிசாவில் இருந்து 121.91 டன் திரவ ஆக்சிஜனை சுமந்து கொண்டு 2 ஆக்சிஜன் ரெயில்கள் நேற்று ஒயிட்பீல்டு ரெயில் நிலையத்தை வந்தடைந்தன. அந்த 2 ரெயில்கள் மூலம் 241.91 டன் திரவ ஆக்சிஜன் வந்து இருந்தது. இதுவரை கர்நாடகத்திற்கு 1894.71 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மத்திய அரசிடம் இருந்து கிடைத்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு