தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா; தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் சுட்டுக் கொலை

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #NCPMembers #Dead

தினத்தந்தி

அகமத்நகர்,

மகாராஷ்டிராவின் அகமத்நகரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) இரண்டு உறுப்பினர்கள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் தேநீர் கடையில் அமர்ந்திருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர்களை பார்த்து சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களாக, யோகேஷ் ராலிபாட் மற்றும் ராஜேஷ் ராலிபாட் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்