கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 2 பேருக்கு ‘ஒமைக்ரான்’ : நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மராட்டியத்தில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி லத்தூரில் ஒருவருக்கும், புனேவில் ஒருவருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிய பாதிப்புகளுடன், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. ( மராட்டியம் - 20, ராஜஸ்தான் - 9, டெல்லி - 2, குஜராத் - 3, ஆந்திரா -1, கர்நாடகா - 3 சண்டிகர் - 1, கேரளா - 1 ).

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது