தேசிய செய்திகள்

ஜார்கண்டில் 2 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை - மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

ஜார்கண்டில் 2 போலீஸ்காரர்கள் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள டஸ்சாம் அருவி பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று காலை 4 மணி அளவில் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்து இருந்த மாவோயிஸ்டுகள் போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்