தேசிய செய்திகள்

பெங்களூருவில் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்

பெங்களூருவில் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சம்பிகேஹள்ளி:

பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றுபவர்கள் ராஜேஸ் மற்றும் நாகேஷ். இவர்கள் 2 பேரும் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம் முன்பாக வியாபாரத்திற்காக வந்திருந்த தம்பதியை மிரட்டி போலீஸ்காரர்களான ராஜேஸ் மற்றும் நாகேஷ் ரூ.1,000 வாங்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த தம்பதி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதுபற்றி உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனூப் ஷெட்டி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரித்ததில், தம்பதியை மிரட்டி 2 போலீஸ்காரர்களும் பணம் வசூலித்தது தெரிந்தது. இதையடுத்து, சம்பிகேஹள்ளி போலீஸ் நிலைய போலீஸ்காரர்களான ராஜேஸ் மற்றும் நாகேசை பணி இடைநீக்கம் செய்து துணை போலீஸ் கமிஷனர் அனூப் ஷெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 2 போலீஸ்காரர்கள் மீதும் துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து