தேசிய செய்திகள்

டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது

டெல்லியில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியின் வடக்கு பகுதியில் பாபர் கல்சா சர்வதேச பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி சிறப்பு படை போலீசார், துப்பாக்கி சூடு நடத்தி 2 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

பிடிபட்டவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்த புபேந்தர் என்ற திலாவர் சிங், குல்வந்த் சிங் என்றும், 2 பேர் மீதும் பஞ்சாபில் பல குற்றவழக்குகள் இருப்பதும், போலீசாரால் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 6 துப்பாக்கிகள், 40 தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

2 பயங்கரவாதிகளும் தலைநகர் டெல்லியில் நாசவேலைக்கு திட்டமிட்டார்களா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை