தேசிய செய்திகள்

மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கவுசாம்பி மாநிலத்தில் உள்ள அமுரா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி உள்பட 2 பெண்கள் நேற்று மதியம் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.