தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் கட்டிட சுவர் இடிந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் கவுதம புத்த நகரில், பிரிவு 20 பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதில், 2 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். எனினும், நள்ளிரவு சூழல் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்ற உடனடியாக யாரும் வராத நிலையில் அவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ஒப்பந்ததாரர் மற்றும் மற்றொரு தொழிலாளரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து