கோப்பு படம் (பிடிஐ) 
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்? விவரங்களை வெளியிட்டது தேர்தல் கமிஷன்

இந்தியாவில் 1951-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17.32 கோடியாக இருந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

இதில் முக்கியமாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது. அதன்படி நாடு முழுவதும் 96 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதில் 47 கோடி பேர் பெண்கள் ஆவர். மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக்கு மேற்பட்டோர் 18-19 வயது பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 18 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 91.20 கோடி ஆகும்.

அதேநேரம் இந்தியாவில் 1951-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17.32 கோடியாக இருந்தது. இது 1957-ல் 19.37 ஆக அதிகரித்து இருந்தது.வருகிற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.அத்துடன் 1.5 கோடிக்கு அதிகமான பணியாளர்கள் வாக்குப்பதிவுக்காக பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை