தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

கர்நாடக மாநிலம் மதனப்பள்ளி அருகே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீகாளஹஸ்தி,

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை அடுத்த நீருகுட்டவாரிப்பள்ளியில் உள்ள ஒரு டீக்கடையில் வாலிபர்கள் பலர் செல்போனில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் மதனப்பள்ளி 2-டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் நரசிம்மலு தலைமையில் போலீசார் விரைந்து வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்து 380, 15 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை