தேசிய செய்திகள்

சி.யூ.இ.டி. தேர்வை 22 மத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுப்பு - யூ.ஜி.சி தகவல்

சி.யூ.இ.டி. தேர்வை 22 மத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான சி.யூ.இ.டி.(CUET) எனப்படும் மத்திய பல்கலைகழகங்களுக்கான பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்தது.

அதன்படி இந்தியாவில் உள்ள 54 மத்திய பல்கலைக்கழகங்களில் டெல்லி ஜே.என்.யூ., புதுச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 32 மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே சி.யூ.இ.டி. தேர்வின்படி மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன.

ஆனால் 22 மத்திய பல்கலைக்கழகங்கள், வரும் கல்வியாண்டில் சி.யூ.இ.டி. தேர்வை ஏற்க மறுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து